Skip to main content

ஏன் மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட வேண்டும்

 மாப்பிள்ளை சம்பா

Why should the groom cultivate samba paddy
மாப்பிள்ளை சம்பா நெல்
மாப்பிள்ளை சம்பா நெல்



புகைப்படத்தில் விவசாயி நிற்பது சோளக்கொல்லையிலோ அல்லது கரும்புச்சோலையின் நடுவிலோ அல்ல...

மாப்பிள்ளை சம்பா 


நெற்பயிர்களின் நடுவில் தான் நிற்கிறார்...


முட்டிக்கால் அளவே நெற்பயிரை பார்த்திருக்கும் நமக்கு ஆறடி உயரத்தில் வளர்ந்து ஆள் நின்றாலும் தெரியாத அளவிற்கு வளர்ந்த நெற்பயிரை பார்ப்பது என்பது  நம்ப முடியாத ஆச்சரியமான விசயமாகத்தான் இருக்கும்..


இந்த நெல்லின் பெயர் மாப்பிள்ளை சம்பா.. பெயரை கேட்டதும் இந்த நெல்லின் மகத்துவம் புரிந்திருக்கும்..ஆம் ச டாக்டர்களால் குணப்படுத்த முடியாத குறைபாட்டை இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி குணப்படுத்தும்..


உணவே மருந்து என்று வாழ்ந்த பண்டைய தமிழ் சமூகத்தில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, பொன்னி, வாசரமுண்டான், என இருபதாயிரத்திற்கும் அதிக நெல் வகைகளை கொண்ட நமது பாரம்பரிய விவசாயம் காலப்போக்கில் அத்தனையும் இழந்து திரு நெல்.ஜெயராமன் அவர்கள் முயற்சியால் இருநூறுக்கும் மேற்பட்ட வகைகளை மீட்டெடுத்தது...

மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா 


180 நாள் பயிர்

இந்த மாப்பிள்ளை சம்பா 180 நாள் மகசூல் பயிர்..வருடத்திற்கு இரண்டு சாகுபடியே செய்ய முடியும்.90 நாள்களில் அறுவடை ஆகும்  அம்பை 16, ஐ ஆர் 8 விதைகளை பயிரிட்டு அறுவடை செய்யும் விவசாயிகள் யாரும் இந்த மாப்பிள்ளை சம்பா பயிரை பயிரிடுவதில்லை.
மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக படியான புரத சத்து, நார்சத்து,  தாது சத்துகளை கொண்ட அரிசி. நார்சத்தை அதிகம் கொண்டதால் நீரழிவு நோயாளிகள் இந்த அரிசியை அதிகம் பயன்படுத்தலாம்.

மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா 


 எதை சாப்பிட்டாலும் ரெண்டு உருண்டை சோறு தின்னால் தான் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். கொஞ்சம் சோத்தை போடும்மா... சோத்தை தின்னால் சுகர் அளவு கூடி விடும் அப்புறம் உம்மை நான் தானே பண்டுவம் பார்க்கணும் என சப்பாத்தியை முறைத்து கொண்டு தட்டில்  போடும் பொண்டாட்டியின் அக்கறையான பாசத்திற்கு கட்டுப்பட்டு விருப்பமில்லாமல் சப்பாத்தியை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியானது உணவே மருந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும். அதிகப்படியான கார்போஹைட்ரேட் ரத்தத்தில் ஏறி எகிறும் சர்க்கரை அளவு அதிகரிப்பை  தவிர்ப்பதற்காகவும் நார்சத்தை அதிகம் சேர்ப்பதற்காக நீரழிவு நோயாளிகள் ஒரு மடங்கு அரிசியுடன் மூன்று மடங்கு காய்கறிகளை உணவில் எடுத்து கொள்வார்கள்..மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகபடியான நார்சத்தினால் வழக்கமான சாம்பார் அல்லது மீன்குழம்பை ஊற்றியே சாப்பிடலாம்...

மாப்பிள்ளை சம்பா பெயருக்கான காரணம்


இனி மாப்பிள்ளை சம்பா பெயருக்கான காரணம்..அதிகப்டியான துத்தநாக தாது சத்துகளை கொண்டதால் முன்பு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட இளைஞர்களுக்கு குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு இந்த அரிசியை உணவாக கொடுத்து பலன் அடைந்திருக்கின்றார்கள்..சாதம் வடித்த தண்ணீரை தூர ஊற்றாமல் அன்னப்பால் என தண்ணீர் தாகத்தின் போது பருக சொல்வார்கள்..முந்தைய நாள் இரவில் மீந்த சாதத்தில் நீரை ஊற்றி காலையில் எழுந்து பல் துலக்கிய பின் கொதிக்கும் டீ ,காபியை சூடாக வெறும் வயிற்றில் குடித்து குடலை கொதிக்க வைக்காமல் குளிர்ந்த நீராகரத்தை பருகுவார்கள்.. 
முந்தைய தலைமுறை பெரிசுகள் பன்னிரெண்டு முதல் பதினைந்து பிள்ளைகளை அசால்ட்டாக அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்ததிற்கு அவர்களுடைய உணவு பழக்கங்களும் ஒரு காரணமே என்பது மிகையில்லை..
சிட்டுக்குருவி லேகியம், தாதுபுஷ்டி லேகியம் , காயகல்பம் என எதை எதையோ சாப்பிடுவதற்கு பதில் பாரம்பரியமான நமது மாப்பிள்ளை சம்பா அரிசியை அவ்வப்போதாவது பயன்படுத்தி விவசாயிகள் இதனை பயிரிட ஆதரவு அளிக்கலாம் தானே.. பயன்படுத்துவோர் அதிகரிக்கும் போது உற்பத்தி பெருகும் தானே..தற்போது குறிப்பிட்ட சில பெரிய கடைகளில் கிடைக்கிறது..ஒரு கிலோ அரிசியின் விலை 120 ரூபாய் முதல் 160 வரையில் விற்பனையாகிறது.

Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்