Skip to main content

Posts

Featured Post

ஆடுதுறை 39 ரகம் விவசாயிகள் கல்சர் நெல்

Recent posts

biofertilizers - Bacillus subtilis for paddy

  நெற்பயிருக்கு உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாட்டில்  பேசில்லஸ் சப்டில்லிஸ்  பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் புற அமைப்பில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.   நெல்லில் பயன்படுத்தும் முறை Click Image ஈரவிதைநேர்த்தி      300 கிராம்  பேசில்லஸ் சப்டில்லிஸை  (பிபிபி 57)  30 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து  ஒரு ஏக்கர் சாகுபடிக்ககுரிய 30 கிலோ விதை நெல்லை இக்கரைசலினுள் 18 மணி நேரம் உறவைத்து, பின் கரைசலை வடித்து 12 மணி நேரம் கழித்து  விதையினை மூட்டமிட்டு மாலையில் நாற்றங்காலில் விதையினை விதைக்கவும்.  நெல் நாற்றின் வேர்களை  நனைத்தல் நாற்றுப்பறியின் போது 10 சதுர மீட்டர் நாற்றங்களிலோ அல்லது பிள

சொர்ணமசூரி நெல் பயிரின் பராமரிப்பு

Paddy Crop - sornamasoori  வயது : 130 லிருந்து 135 நாள் வரை*. நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும். ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம்  தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் . ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம். ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம். நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும். நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும். நட

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்

நெல் செம்புள்ளி நோய் இயற்கை முறை கட்டுப்பாடு

Paddy Brown Spot Organic control Method  இது ஒரு பூசண நோயாகும் நாற்றங்கால் முதல் நெல் பால் பிடிக்கும் வரை இந்தநோயின் தாக்கம் இருக்கும் அல்லது பயிரை தாக்கும் . நெல் தாளில் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றி வட்டவடிவமாக மாறும் அந்த வட்டவடிவங்கள் ஓன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும் . மேலும் நெல்லின் தரம் பாதிக்கப்படும் முளைப்பு திறன் பாதிக்கப்படும். இந்த நெல் செம்புள்ளி நோய் தீவிரமாக மாறினால் கிட்டத்தட்ட 50 சதவீத மகசூல் பாதிக்கப்படலாம் . நெல் செம்புள்ளி நோய் எப்படி பரவலாம்  உங்கள் வயல்களில் உள்ள கலைச்செடி மூலம் பரவலாம் . நெல் விதைகள் மூலம் பரவலாம் நெல் விதைகளில் 4 வருடம் வரை இந்த பூஞ்சாணம் உயிருடன் இருக்கக்கூடியது . 80 % மேல் ஈரப்பதம் தொடர்ந்து இருந்தால் பரவும் , தலை சத்து அதிகமாக இருந்தாலும் பரவும்  நெல் செம்புள்ளி நோய் எப்படி தடுக்கலாம்  நோயற்ற விதைகளை பயன்படுத்தலாம் . விதைப்பதற்கு முன் விதை நேர்த்திசெய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை விதை நேர்த்தி செய்யலாம் பின்பு நாற்றங்காலில் தூவலாம் . ஹெக்ட்டருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ ச

கோ 51 நெல் கவனிக்க வேண்டியவை

 கோ 51  நம்மிடம் இருக்கும் நெல் ரகங்களிலே அளவுக்கு அதிகமான விளைச்சல் தரக்கூடிய ராகம் கோ 51நெல்ரகமாகும் 4200 முதல் 4600 கிலோ ஹெக்டருக்கு தரக்கூடியவல்லது . வயது 110 நாளாகும் .  இதில் என்ன குறையென்றால் ஒரு பயிருக்கு இருக்கவேண்டிய நெல்மணிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் , அப்பொழுது அந்த தாள்கள் முறையான அமைப்பு இல்லாமல் இருந்தால் அது சாய்ந்து விடலாம்  இதை முறையாக வளர்த்து  கொண்டுவர என்னசெய்யவேண்டும் என்றால் , ஆரம்ப காலத்திலிருந்து பயிரோட நெல் பயிரோட தன்மைகளுக்கு எடை கொடுக்கற மாதிரியான கால்சியம் சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கலாம் அதே சமயம் பொதுவான சத்துக்கள் இருக்கும் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் . இயற்கை விவசாயத்தில் முட்டை ரசம் சிறப்பானது மழைக்காலத்தில் மட்டுமல்ல வெயில் காலத்தில் போட்டாலும் நல்ல பலன்தரும் . பயிர் நடத்திலிருந்து கதிர் வரும் வரை 25 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம் . குறைந்தது இரண்டு முறையாவது கொடுப்பது நல்ல பலன் தரும் . இதை தவிர்த்து தரை வழியாக மீன் அமிலம் ஈ .எம் கரைசல் ஊட்டம் ஏற்றிய தொழு உரம் நேரடி சாம்பல் இதெல்லாம் தரை வழியாகவும் பஞ்சகாவியாவை தெளித்தும் கொடுக்கலாம் இத

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

ADT 45 நெல் பயிருக்கு என்னென்ன பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு

What is ADT 45 Crop Protection and Disease Prevention for Paddy Crops? பாக்டீரியல் குலை நோய் ADT 45 நெல் பயிருக்கு மழைக்காலம் என்று பார்த்தால் பாக்டீரியல் குலை நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் , வெளியே தெரியுறமாதிரி பார்த்தா பாக்டீரியல் குலை நோய் எப்படி இருக்கும்னு சொன்னா நாலு இலை இருந்தால் இரண்டு இலை பச்சையாகவும் இரண்டு இல்லை பிரவுன் ஆக  இருக்கும்   அப்படி இருந்தால் உடனடியாக பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ 10 லிட்டருக்கு 50 மில்லி தெளித்து விடுங்கள் , தரை வழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் . ஆனைக்கொம்பன் நடவு நட்ட 40 வைத்து நாள் அதாவது நாற்று நட்ட 20 வது நாள் யானைக்கொம்பன் தாக்க வாய்ப்பு இருக்கும் இது புழுக்களில் இருந்து வரக்கூடியது . இதை கட்டுப்படுத்த பெவேரிய பேசியான 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் இது ADT 45 ல் வரும் புகையானையும் கட்டுப்படுத்தும் . கதிர்நாவாய் பூச்சி 70 வது நாள் முதல் பூக்கும் பூத்து  முடுச்ச ஒரு வாரத்துக்கு அப்புறம் கதிர்நாவாய் பூச்சி தாக்கம் இருக்கலாம் . இந்த நேரத்தில் வசம்பு கரைசல் தயார் செய்து கொடுக்கலாம்  புகையான் 85 வது நாள் முதல் 100 வது நாள் வரை புகை