Skip to main content

Posts

Showing posts from February, 2021

சொர்ணமசூரி நெல் பயிரின் பராமரிப்பு

Paddy Crop - sornamasoori  வயது : 130 லிருந்து 135 நாள் வரை*. நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும். ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம்  தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் . ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம். ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம். நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும். நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும். நட

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்

நெல் செம்புள்ளி நோய் இயற்கை முறை கட்டுப்பாடு

Paddy Brown Spot Organic control Method  இது ஒரு பூசண நோயாகும் நாற்றங்கால் முதல் நெல் பால் பிடிக்கும் வரை இந்தநோயின் தாக்கம் இருக்கும் அல்லது பயிரை தாக்கும் . நெல் தாளில் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றி வட்டவடிவமாக மாறும் அந்த வட்டவடிவங்கள் ஓன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும் . மேலும் நெல்லின் தரம் பாதிக்கப்படும் முளைப்பு திறன் பாதிக்கப்படும். இந்த நெல் செம்புள்ளி நோய் தீவிரமாக மாறினால் கிட்டத்தட்ட 50 சதவீத மகசூல் பாதிக்கப்படலாம் . நெல் செம்புள்ளி நோய் எப்படி பரவலாம்  உங்கள் வயல்களில் உள்ள கலைச்செடி மூலம் பரவலாம் . நெல் விதைகள் மூலம் பரவலாம் நெல் விதைகளில் 4 வருடம் வரை இந்த பூஞ்சாணம் உயிருடன் இருக்கக்கூடியது . 80 % மேல் ஈரப்பதம் தொடர்ந்து இருந்தால் பரவும் , தலை சத்து அதிகமாக இருந்தாலும் பரவும்  நெல் செம்புள்ளி நோய் எப்படி தடுக்கலாம்  நோயற்ற விதைகளை பயன்படுத்தலாம் . விதைப்பதற்கு முன் விதை நேர்த்திசெய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை விதை நேர்த்தி செய்யலாம் பின்பு நாற்றங்காலில் தூவலாம் . ஹெக்ட்டருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ ச

கோ 51 நெல் கவனிக்க வேண்டியவை

 கோ 51  நம்மிடம் இருக்கும் நெல் ரகங்களிலே அளவுக்கு அதிகமான விளைச்சல் தரக்கூடிய ராகம் கோ 51நெல்ரகமாகும் 4200 முதல் 4600 கிலோ ஹெக்டருக்கு தரக்கூடியவல்லது . வயது 110 நாளாகும் .  இதில் என்ன குறையென்றால் ஒரு பயிருக்கு இருக்கவேண்டிய நெல்மணிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் , அப்பொழுது அந்த தாள்கள் முறையான அமைப்பு இல்லாமல் இருந்தால் அது சாய்ந்து விடலாம்  இதை முறையாக வளர்த்து  கொண்டுவர என்னசெய்யவேண்டும் என்றால் , ஆரம்ப காலத்திலிருந்து பயிரோட நெல் பயிரோட தன்மைகளுக்கு எடை கொடுக்கற மாதிரியான கால்சியம் சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கலாம் அதே சமயம் பொதுவான சத்துக்கள் இருக்கும் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் . இயற்கை விவசாயத்தில் முட்டை ரசம் சிறப்பானது மழைக்காலத்தில் மட்டுமல்ல வெயில் காலத்தில் போட்டாலும் நல்ல பலன்தரும் . பயிர் நடத்திலிருந்து கதிர் வரும் வரை 25 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம் . குறைந்தது இரண்டு முறையாவது கொடுப்பது நல்ல பலன் தரும் . இதை தவிர்த்து தரை வழியாக மீன் அமிலம் ஈ .எம் கரைசல் ஊட்டம் ஏற்றிய தொழு உரம் நேரடி சாம்பல் இதெல்லாம் தரை வழியாகவும் பஞ்சகாவியாவை தெளித்தும் கொடுக்கலாம் இத