Skip to main content

Posts

Showing posts from January, 2021

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

ADT 45 நெல் பயிருக்கு என்னென்ன பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு

What is ADT 45 Crop Protection and Disease Prevention for Paddy Crops? பாக்டீரியல் குலை நோய் ADT 45 நெல் பயிருக்கு மழைக்காலம் என்று பார்த்தால் பாக்டீரியல் குலை நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் , வெளியே தெரியுறமாதிரி பார்த்தா பாக்டீரியல் குலை நோய் எப்படி இருக்கும்னு சொன்னா நாலு இலை இருந்தால் இரண்டு இலை பச்சையாகவும் இரண்டு இல்லை பிரவுன் ஆக  இருக்கும்   அப்படி இருந்தால் உடனடியாக பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ 10 லிட்டருக்கு 50 மில்லி தெளித்து விடுங்கள் , தரை வழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் . ஆனைக்கொம்பன் நடவு நட்ட 40 வைத்து நாள் அதாவது நாற்று நட்ட 20 வது நாள் யானைக்கொம்பன் தாக்க வாய்ப்பு இருக்கும் இது புழுக்களில் இருந்து வரக்கூடியது . இதை கட்டுப்படுத்த பெவேரிய பேசியான 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் இது ADT 45 ல் வரும் புகையானையும் கட்டுப்படுத்தும் . கதிர்நாவாய் பூச்சி 70 வது நாள் முதல் பூக்கும் பூத்து  முடுச்ச ஒரு வாரத்துக்கு அப்புறம் கதிர்நாவாய் பூச்சி தாக்கம் இருக்கலாம் . இந்த நேரத்தில் வசம்பு கரைசல் தயார் செய்து கொடுக்கலாம்  புகையான் 85 வது நாள் முதல் 100 வது நாள் வரை புகை

இலுப்பை பூ சம்பா கதிர் பரியவில்லை மற்றும் குருத்து புழு , கரையான் கட்டுப்பாடு

  Paddy nematode, termite control and Boron Management    இலுப்பை பூ சம்பா இலுப்பை பூ சம்பா 85 நாள் பயிர். ஒரு தூரில் உள்ள 3-4 நாற்றுகள் மட்டுமே கதிர் பரிந்துள்ளது. மற்ற 16-20 நாற்றுகளில் கதிர் பரியவில்லை. அனைத்து தூர்களில் இவ்வாறு உள்ளது  வேப்பெண்ணை கரைசல்  இருந்தால் 10 லிட்டருக்கு 30 மில்லி வேப்பெண்ணை கலந்து நன்றாக கரைத்துவிட்டு தெளிக்கலாம் . பெவேரியா பேசியான  10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கவேண்டும் இது இரண்டையும் 6 வது  நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் . பின்பு பயிருக்கு தேவையான இடுபொருட்கள் சரியா கிடைக்கிற மாதிரி கொடுப்பது நல்லது . போரான் இதனுடன் நுன்னூட்ட சத்துக்கள் போரான்  கொடுக்கவேண்டும் . போரான் சத்துக்கு எருக்கு கரைசல் கொடுக்கலாம் அல்லது போராக்ஸ் பவுடர் வாங்கி சாணத்துடன் கலந்து வேரில் படுவதுபோல் கொடுக்கலாம்  குருத்து புழு  நெல்லில் குருத்து புழு அழுகளுக்கு பேவெறியா பேசியானா , பேசில்லஸ் துரிஞ்சயன்சிஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து இழையோட முன்னும் பின்னும் படுவதுபோல் ,முக்கியமாக குருத்துகளில் படுவதுமாதிரி தெளிக்கவேண்டும் . ஒருதடவை தெளித்தால் பத்தாவது நாள் தெளிக்க வேண

Cr நெல் குருத்து பூச்சி கட்டுப்பாடு மற்றும் BPT நெல் பயிர் பாதுகாப்பு முறைகள்

   Cr Paddy Pest Control and BPT paddy Crop Protection Methods பயிர் PPT நெல்  60  நாள் ஆகிறது. பயிர் பாதுகாப்பு என்ன செய்யலாம்.  நெல் பயிரில் அதிகமான பிரச்சனைகள் எங்கிருந்து வரும்மென்றால் அது புழுக்களால்தான் , புழு வராமல் இருக்க தடுப்பு முறைகள் செய்யவேண்டும்  அதில் முக்கியமானது வேப்பெண்ணை கரைசல் , பொன்னீம் கரைசல் , அக்னீ அஸ்த்திரம் , ஜீவாமிர்தம்  , கற்பூரக்கரைசல் இந்த நான்கு  பொருட்களில் ஏதாவது ஒன்றை தொடர்ச்சியாக எல்லா  கலக்கட்டத்திலையும் அதாவது பயிர் முற்றி மஞ்சளாகுர  காலம் வரை  எட்டுநாளைக்கு அல்லது பத்து நாளைக்கு ஒரு முறை தெளிப்பதால் நிறைய பலன்கள் இருக்கும் முக்கியமாக வெள்ளை பூச்சி வந்து புழு வராமல் இருப்பதற்க்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். அடுத்ததாக பூ வந்து பால் கதிர் வருது, பால் கதிர் வரும்பொழுது உறுஞ்சாமல் இருப்பதற்க்கு இந்த திரவங்களைபயன்படுத்துவதால் நல்ல பலன்கள் தரும்  நெல் மணிகளில் நோய்கள் வராமல் இருப்பதற்க்கும் இதை பயன்படுத்தலாம் BPT நெல் ரகத்தில் குலை நோய் தாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு , முன் எச்சரிக்கையாக   தெளிப்பது நல்லது . இல்லையென்றால் பெவேரிய பேசியானா , பேசில்ஸ் சப்ஸ

இயற்கை முறையில் பூங்கார் நெல் சாகுபடி

 Poonkar paddy cultivation in a Organic way பூங்கார் நெல்  இது ஒரு எழுபது முதல் என்பது நாள் வயது கொண்ட  குறுகிய கால நெல் பயிராகும் . எல்லா பருவத்திற்க்கும் ஏற்ற ரகமாகும் . அதிக வெள்ளம் உள்ள சமயங்களிலும் அல்லது வரட்சி உள்ள நேரத்திலும் நன்கு தாங்கி வளரக்கூடிய ரகமாகவும், கதிர் அறுவடை சமயத்தில் மழை  பெய்தால் கூட நாப்பது நாட்கள் விதை உறக்கத்திற்கு பின்பே முளைக்கும் , நேர் கதிர்கள் நீருக்குள் மூழ்கி இருந்தாலும் முளைக்காது . முன்னாளில் இதனை "அறுபதாம் கொடை" என்று அழைக்கப்பட்டது நோய் எதிர்ப்பு கொண்ட ரகமாகவும் அதிக மகசூல் தரக்கூடியது .  இட்லி  மற்றும் தோசை செய்வதற்க்கு சிறந்த ரகமாகும் மேலும் இதன் தவிடு சுவையானதாக இருக்கும். மருத்துவ குணம்  பூங்கார் அரிசியை  தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு அதிக வலிமை கிடைக்கிறது ஒரு இயலப்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பான பிரசவம் நடைபெறும் . நாற்றங்கால் தயாரிப்பு  தமிழ்நாட்டில் எல்ல மாவட்டங்களில் உள்ள மண் வகைகளுக்கு ஏற்றது இந்த பூங்கார் ரகம் ஆண்டுக்கு மும்முறை சாகுபடி செய்யலாம்.  அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம் எ