Skip to main content

biofertilizers - Bacillus subtilis for paddy

 நெற்பயிருக்கு உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாட்டில்  பேசில்லஸ் சப்டில்லிஸ் 



பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் புற அமைப்பில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.  


நெல்லில் பயன்படுத்தும் முறை

Click Image


ஈரவிதைநேர்த்தி 


    300 கிராம்  பேசில்லஸ் சப்டில்லிஸை  (பிபிபி 57)  30 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து  ஒரு ஏக்கர் சாகுபடிக்ககுரிய 30 கிலோ விதை நெல்லை இக்கரைசலினுள் 18 மணி நேரம் உறவைத்து, பின் கரைசலை வடித்து 12 மணி நேரம் கழித்து  விதையினை மூட்டமிட்டு மாலையில் நாற்றங்காலில் விதையினை விதைக்கவும். 


நெல் நாற்றின் வேர்களை  நனைத்தல்


நாற்றுப்பறியின் போது 10 சதுர மீட்டர் நாற்றங்களிலோ அல்லது பிளாஷ்டிக் டப்புகளிலோ (Plastic Tub) ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து அக்கரைசலில் பறித்த நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 20 நிமிடம் உறவைத்து பின்பு நடவு வயலில் நடவும். 


நேரடியாக வயலில் இடுதல்


நடவு நட்ட  30ம் நாள்  ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை 20 கிலோ நன்கு மக்கிய தொழு எருவுடன்  கலந்து 1 ஏக்கர் பரப்பளவு வயலில் சீராக தூவ வேண்டும்


தெளிப்பு முறை


முதல் முறை தெளிப்பு 


நடவு நட்ட 45ம் நாள்  ஒரு ஏக்கருக்கு  90  லிட்டர் நீரில் 450 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை  கரைத்து  (1 மாவிற்கு 3 டேன்க் அதாவது 30 லிட்டர் நீர் + 150 கிராம் பிபிவி 57) நெற்பயிர் முழுவதும் நன்கு நனையும் படி குளிப்பாட்டவும். 


2ம் முறை தெளிப்பு  

நெற்பயிர் தண்டு உருளும் பொழுது  90 லிட்டர் நீரில் 450 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து பயிர் நன்கு நனையும் படி தெளிக்கவும். 


பேசில்லிஸ் சப்டில்லிஸ்  சிறப்புகள் 


1) இதனை சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம். 


2)  இப்பேக்டீரியம் உயிர் எதிர்பொருளை சுரப்பதுடன், நைட்ரஜன் என்ற தாதுப்பொருளை நிலைநிறுத்துவதால், நெற்பயிரின் நோயைக்  கட்டுப்படுத்துகிறது.


3) இப்பேக்டீரியம் தாவரத்தினுள் வாழும் தன்மையுடையதால் மண்ணில் வாழும் பூஞ்சாணக் காரணிகளை நன்றாக கட்டுப்படுதும். 


குறிப்பு: 


1) இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த 6 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். 

2) இதனை அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா போன்ற  அனைத்து உயிர் உரங்களுடன் கலந்து வயலில் இடலாம். 

3) இதனை பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது. 

Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்