Skip to main content

சொர்ணமசூரி நெல் பயிரின் பராமரிப்பு

Paddy Crop - sornamasoori 






வயது : 130 லிருந்து 135 நாள் வரை*.

நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.

ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம்  தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .

ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.

ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.

நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.

நடவிலிருந்து 3 ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும், பாசன நீரில் ஜீவாமிர்தம் 200 லிட் கொடுக்கலாம்.

10 வது நாள் --  மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml

18வது நாள் -- மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 m

20 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா பத்து லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் மாலையில் இஎம் கரைசல் தரைவழி ஒரு லிட்டர் கொடுக்கலாம்.

25 வது நாள் --மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml

30 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

32 வது நாள் -- கோனோவீடர்(கோனோவீடர் போடும்போது பயிர்களின் இடைவெளியில் உள்ள களைகளை ஆட்களை வைத்து கைகளை எடுக்க வேண்டும்

35 வது நாள் காலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி தரலாம். மாலையில் பொன்னீம் கரைசல் தெளிக்கலாம்.

37 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து கொடுக்கலாம்.
 மாலையில் மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml

43 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

48வது நாள் -- இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.

55 வது நாள் பொன்னீம் ஸ்பிரே

60 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

70 வது நாள்-- மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml

75 வது நாள் -- அக்னிஅஸ்திரம்  ஸ்பிரே. 

80 வது நாள் -- காலை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.


85வது நாள் -- 10 லிட்டருக்கு 500 மில்லி என கலந்து தேமோர் கரைசல் அல்லது 300 மில்லி பஞ்சகவியா அல்லது இஎம் கரைசல் தெளிக்கலாம்

 90 வது நாள் --ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

95 வது நாள் --  காலையில் வசம்பு கரைசல் பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் கலந்து தெளிக்கலாம்
 மாலையில் மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml.

102 வது நாள் -- மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml.

106வது நாள் -- கற்பூர கரைசல் அல்லது பவேரியா பேஸியாநா (10 லிட்டருக்கு 50 மில்லி) கலந்து தெளிக்கலாம்.

110 வது நாள் -- பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தரைவழி தண்ணீருடன் கலந்து தரவும்.

115 வது நாள் -- இஎம் கரைசல்  தரைவழி ஏக்கருக்கு இரண்டு லிட்டர் கலந்து கொடுக்கலாம்.

120 வது நாள் -- காலை சூடோமோனஸ் ஐ பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 750 ml.

இது போன்ற திட்டமிட்ட பயிர் வளர்ப்பு நமக்கு இரசாயன விவசாயத்தின் விளைச்சலை காட்டிலும் இன் இருமடங்கு இலாபத்தையும், விளைச்சலையும் அள்ளி தரும்.

Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்