Skip to main content

நெல் செம்புள்ளி நோய் இயற்கை முறை கட்டுப்பாடு

Paddy Brown Spot Organic control Method 




இது ஒரு பூசண நோயாகும் நாற்றங்கால் முதல் நெல் பால் பிடிக்கும் வரை இந்தநோயின் தாக்கம் இருக்கும் அல்லது பயிரை தாக்கும் . நெல் தாளில் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றி வட்டவடிவமாக மாறும் அந்த வட்டவடிவங்கள் ஓன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும் . மேலும் நெல்லின் தரம் பாதிக்கப்படும் முளைப்பு திறன் பாதிக்கப்படும். இந்த நெல் செம்புள்ளி நோய் தீவிரமாக மாறினால் கிட்டத்தட்ட 50 சதவீத மகசூல் பாதிக்கப்படலாம் .


நெல் செம்புள்ளி நோய் எப்படி பரவலாம் 


உங்கள் வயல்களில் உள்ள கலைச்செடி மூலம் பரவலாம் . நெல் விதைகள் மூலம் பரவலாம் நெல் விதைகளில் 4 வருடம் வரை இந்த பூஞ்சாணம் உயிருடன் இருக்கக்கூடியது . 80 % மேல் ஈரப்பதம் தொடர்ந்து இருந்தால் பரவும் , தலை சத்து அதிகமாக இருந்தாலும் பரவும் 


நெல் செம்புள்ளி நோய் எப்படி தடுக்கலாம் 


நோயற்ற விதைகளை பயன்படுத்தலாம் . விதைப்பதற்கு முன் விதை நேர்த்திசெய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை விதை நேர்த்தி செய்யலாம் பின்பு நாற்றங்காலில் தூவலாம் . ஹெக்ட்டருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை கலந்து , ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து நடலாம் . கலைச்செடிகள் மற்றும் மாற்று செடிகள் வரப்பு ஓரத்தில் உள்ள செடிகளை அளிக்கவேண்டும் . 


ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு போன்ற செம்புள்ளி நோய் எதிர்ப்பு கொண்ட ரகங்களை நடலாம் . பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரங்களை இடலாம் . மழை  தொடர்ந்து பெய்தால் , நோய் அறிகுறி தென்பட்டால் பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ தெளிக்கலாம் தெளித்த 7 வது நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் .

Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்